புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கில் பாதை மறிக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் (ஜூலை 26) குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளமங்கலம் வடக்கு ஊராட்சி கொப்பியான் குடியிருப்பையும், ஆதிதிராவிடர் தெருவையும் இணைக்கக்கூடிய சுமார் 1 கிலோ மீட்டரில் உள்ள இணைப்புச் சாலையில் சுமார் 10 மீட்டர் நீளத்தைத் தனது சொந்த இடம் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாதையை மறித்துவிட்டார்.
இதனால், அவ்வழியே கடந்த 3 நாட்களாக யாரும் செல்ல முடியவில்லை. இதுகுறித்து வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, கொப்பியான்குடியிருப்பு பகுதி பொதுமக்கள், சமையல் பாத்திரங்கள், கால்நடைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து ஆலங்குடி வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கீரமங்கலம் போலீஸார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.