S.P.பட்டிணம் தமுமுக மமக கிளை சார்பில் முப்பெரும் விழா






இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக மமக S.P.பட்டிணம் கிளை சார்பில் முப்பெரும் விழா 

தமுமுக மமக அலுவலகம் திறப்பு தமுமுக கொடியேற்றம் .மற்றும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் 24 ஜூலை 2021 சனிக்கிழமை  நடைபெற்றது .

நிகழ்வை மமக மாவட்ட துணை செயலாளர் நிசார் தலைமையேற்று நடத்தினார். S.p.பட்டிணம் கிளை பொருலாளர் அசாருதீன் வரவேற்றார்.தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிஃப்ரி, மமக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா தமுமுக மாவட்ட துனை செயலர் முகம்மது அலி மமக மாவட்டதுனை செயலர் உபைதுல்லாஹ்  திருவாடனை ஒன்றிய தமுமுக தலைவர் பீர்முகம்மது மமக ஒன்றிய செயலர் தொண்டிராஜ் .உலாம அனி நைய்னாமுகமது. அன்சாரி  நைனா .நசிர் ஆகியோர் முன்னிலை வகித்தினர். முன்னதாக s.p.பட்டிணம் கிளை அலுவலகத்தை ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலிம் திறந்து வைத்தார்கள்.

 இந்நிகழ்வில் மமக மாநில துணை பொது செயலாளர் மதுரை கௌஸ் அவர்களும் தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்து தமுமுக கொடியேற்றி  சிறப்புரையாற்றினர். திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார் வாழ்த்துரை வழங்கினார்.இந்த இரத்ததான முகாமில் 60-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். 

கிளை தலைவர் பசீர் அலி நன்றியுரையாற்றினார்
நிகழ்வை சகுபர் சாதிக், கலந்தர் பகுருதீன், முகமது அலி ஜின்னா, அசாருதீன், அகமது ஜலால், சிராஜுதீன், அப்துல் காதர் ஜெய்லானி, ஹாஜி முகமது, ஜாவித், சேக் மன்சூர் இபுராஹிம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments