வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டு கல்லூரிகளுக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டே உள்ளன. இடையில் முதல் அலை குறைந்தபோது, சில காலம் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அப்போது கொரோனா 2ஆம் அலை தொடங்கியதால் கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இப்போது 2ஆம் அலையும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டன. கல்லூரிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தச் சூழலில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என மொத்தம் 112 கல்லூரி உள்ளன.
இதில் படிக்கும் அனைத்து மாணவர்களும் மாநகராட்சி மூலம் கொரோனா வேக்சின் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேக்சின் போடும் பணி தொடர்ந்து நடைபெறும்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டு கல்லூரிகளுக்கு வர வேண்டும். கொரோனா ஒழிக்க அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் உயர் கல்வித்துறை உறுதுணையாக இருக்கும்" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.