புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி





புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புதுக்கோட்டை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இதேபோல கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட கிராம ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தினரால் நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments