2021-ம் ஆண்டில், காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக நாடு முழுவதும் இருந்து 152 போலீசார், ஒன்றிய உள்துறை மந்திரியின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சி.பி.ஐ.யில் இருந்து 15 பேரும், மராட்டியம், மத்திய பிரதேசத்தில் இருந்து தலா 11 பேரும், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேரும், கேரளா, ராஜஸ்தானில் இருந்து தலா 9 பேரும், தமிழகத்தில் இருந்து 8 பேரும், பீகாரை சேர்ந்த 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் பெண்கள் ஆவார்கள்.
சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக தமிழகத்தில் இருந்து தேர்வான 8 போலீசாரின் விவரம் வருமாறு:-
8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
* எம்.சரவணன் - நாகை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்.
* ஏ.அன்பரசி - திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்.
* பி.கவிதா - கடலூர் மாவட்டம் புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* ஆர்.ஜெயவேல் - திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* கே.கலைச்செல்வி - செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* ஜி.மணிவண்ணன் - சென்னை கிழக்கு மண்டல புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* பி.ஆர்.சிதம்பர முருகேசன் - சென்னை பூந்தமல்லி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* சி.கண்மணி - குமரி மாவட்டம் நாகர்கோவில் சிறப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இந்த சிறப்பு விருது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவியல் விசாரணையின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசாரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.