ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்தியும், கொரோனா விழிப்புணர்வு பற்றிய பாடலுக்கேற்ப கோலாட்ட நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
பாலூட்டும் அனைத்து தாய்மார்களுக்கும், தாய்ப்பால் கொடுப்பதை தீவிரமாக ஆதரிக்கவும், பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் அனைத்து முயற்சிகளையும் செய்யப்படும். தாய்ப்பால் தவிர பிற திரவங்கள் (மாட்டுப்பால், பால்பவுடர், தேன் சர்க்கரை தண்ணீர், கழுதைப்பால் மற்றும் பிற) தருவதை கடுமையாக எதிர்ப்பது, பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடங்குவதற்கும், தோலுடன் தோல் தொடர்பு கொள்வதற்கும், அனைத்து தாய்மார்களும் ஆதரவளிப்பது, சாதாரண மற்றும் சிசேரியன் பிரசவங்களில் தாய்மார்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பது ஆகிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசு மகளிர் கலை கல்லூரி, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நார்த்தாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குன்றாண்டார்கோவில் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்துடன் நிறைவுப் பெறுகிறது. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுர சுந்தரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.