கோட்டைப்பட்டினம் அருகே கடலில்நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் பலி





கோட்டைப்பட்டினம் அருகே கடலில் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீரென இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பட்டாணி (வயது 68). இவரது மருமகன் ராமச்சந்திரன் (38). இவர்கள் இருவரும் நேற்று நாட்டுப்படகு மூலம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பட்டாணி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வலியில் துடித்த அவர் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு பார்த்தபோது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். 
மீனவர் சாவு 
பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் குழுமம் போலீசார் இறந்த பட்டாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments