கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிவா, ரங்கா, மயிலாடுதுறை ராஜசேகர், சீர்காழி சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் திருப்பதி ஆகியோர் ஒரு ஏஜென்ட் மூலம் ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவு செய்து கடந்த டிசம்பர் மாதம் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளனர். அங்கு போய் பணியில் சேர்ந்த பிறகு தான் கொத்தடிமைகளாக தாங்கள் ஆக்கப்பட்டுள்ளோம் என்பதும், இரவு பகலாக தாங்கள் பார்க்கும் பணிக்கு ஊதியம் கிடையாது என்பதும் அவர்களுக்கு தெரியவருகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் தங்கள் உறவினர் மூலம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான ராஜசேகரிடம் மேற்கண்டவர்கள் தெரிவிக்க, இதுபற்றிய தகவல் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மூலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டு பிரிவான செந்தமிழர் பாசறைக்கு தகவல் தெரிவிக்க, செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள தமிழர்களை தங்களது சொந்த பொறுப்பில் மீட்டு
தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தாயகம் திரும்பிய பாதிக்கப்பட்ட 5 தமிழர்களும் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தாங்கள் இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரியும் இன்றைய தினம் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.
இந்த நிகழ்வில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், கும்பகோணம் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன், ராஜசேகர், தம்பி அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் கட்டிய பணத்தை மீட்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
தமிழர்கள் கொத்தடிமையாக பட்ட செய்தி தெரிந்தவுடன் விரைந்து செயல்பட்ட கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டு பிரிவு செந்தமிழர் பாசறை பொறுப்பாளர்களுக்கும் தாயகம் திரும்பிய உறவுகள் தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.
நாம் தமிழர்.
வழக்கறிஞர் மணி செந்தில்,
நாம் தமிழர் கட்சி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.