அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சித்தன்னவாசல் சாலை பரபரப்பாக இருந்த நிலையில் திடீரென மின்கம்பத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் நின்றவர்கள் பயத்துடன் தெரித்து ஓடினர். பின்னர் அனைத்து விளக்குகளும் வெடிப்பதற்கான காரணம் குறித்து பார்த்தபோது உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பாதையில் தெருவிளக்கிற்கு செல்லும் மின் கம்பி உரசியதால் விளக்குகள் வெடித்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அப்பகுதியினர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக அப்பகுதியை பார்வையிட்டு உரிய வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு உயர் அழுத்த கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையான தொழில் நுட்பங்களை பின்பற்றாமல் மின்கம்பிகள் அமைந்திருப்பதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதற்கு காரணம். எனவே பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் செல்வதை உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.