புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் எதிர்வரும் 9 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண்.9, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு எண்.5, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்காடு, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை, கீழத்தானியம், மறவாமதுரை ஆகிய கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 41 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
தற்செயல் தேர்தலுக்கான வேட்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 22 ஆம் தேதியாகும். பெறப்படும் வேட்பு மனுக்கள் அனைத்தும் வரும் 23 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும். வேட்பு மனுக்களை வரும் 25 ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
போட்டியுள்ள பதவியிடங்களுக்கு வரும் 9 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த தற்செயல் தேர்தல்களுக்கு மொத்தம் 178 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன வாக்குப்பதிவு வரும் 9 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான 9 ஆம் தேதி அன்று மாலை 5 மணி முதல் 6 மணிவரை வாக்களித்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அடுத்த மாதம் 12.10.21 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதம் 16.10.21ஆம் தேதி முன்பாக முடிவடையும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04322-221691 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கவும் மற்றும் தேவைப்படும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.