புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் பங்கேற்று மரகன்றுகளை நட்டு வைத்து ஜாதிமதம் பாராமல் செயல்படுவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் பேச்சு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பணியேற்பு விழா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் கிரீன் முகம்மது, மாவட்ட செயலாளர் அகமது கான் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில துணைத் தலைவர் இராஜாராம், தலைமை செயலாளர் மெஸ்மர்காந்தன், அமிர்தா வித்தியா விகாஸ் தாளாளர் பொன்.துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
காரைக்குடி, திருவாரூர் மாதிரி ஓட்டத்தை விரைவு இரயிலாக இயக்கி சென்னை வரை நீட்டித்துதர வேண்டும்.அறந்தாங்கி சுற்று வட்ட சாலை விரைவில் அமைக்க வேண்டும். அறந்தாங்கியில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையை விரிவுபடுத்தி நவீனப் படுந்தவேண்டும். அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவு படுத்தவேண்டும், அறந்தாங்கியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்காக்களை அமைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்களை மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் முபாரக் அலி முன்மொழிந்தார். கவிஞர் ஜீவி, ஐடியல் தாளாளர் சேக் சுல்தான், வழக்கறிஞர் வெங்கடேசன், மீனாட்சி நாச்சியார் தாளாளர் நாகராஜன் ஆகியோர் நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மலையப்பன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.