புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை கண்டித்து பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் தமிழகத்தில் சுங்கச்சாவடியை வேண்டாம் அதை அகற்ற கோரி ஒன்றிய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் லேணா விளக்கு சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பிச்சைக்கார வேடம் அணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுத்து சுங்கச் சாவடி அலுவலகத்திற்கு செலுத்தும் விதமாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து சுங்கச் சாவடி அலுவலகத்திற்கு செலுத்தும் விதமாக நாங்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம்.
மேலும் தற்போது பாஸ்டாக் என்ற பெயரில் அவர்களாகவே வாகனங்களுக்கான கட்டணத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் அப்படி பாஸ்டாக் அல்லாத வாகனத்திற்கு ஒரு சுங்கச்சாவடி கடப்பதற்கு 90 ரூபாய் வசூல் செய்கின்றனர். இது அதிகப்படியான கொள்ளை அடிக்கும் விதமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை ஒன்றிய அரசு அகற்ற கோரியும் சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிகமாக கட்டணம் வசூல் செய்து கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.