ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகம், துப்புரவு பணி, மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் மறுசுழற்சி, திறந்தவெளியில் காலைக்கடன்களை கழிக்கும் நிலையை போக்குதல் போன்ற பணிகளுக்காக ஒன்றிய அரசு ஆண்டுதோறும் மானிய உதவித்தொகை வழங்கி வருகிறது.
ஒன்றிய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் குடிநீர், துப்புரவு திட்டங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிக்கு மேல் கூடுதலாக ஒன்றிய அரசு வழங்குவதுதான் இந்த மானிய உதவித்தொகை ஆகும்.
இந்தநிலையில், நடப்பு நிதியாண்டுக்காக, 25 மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.13 ஆயிரத்து 385 கோடியே 70 லட்சம் மானிய உதவித்தொகையை விடுவித்துள்ளது.
15-வது நிதி கமிஷன் சிபாரிசுப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நிதி, மேற்கண்ட மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், துப்புரவு பணிகளை மேற்கொள்ள உதவும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரூ.800 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 783 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, முதலில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து பெற்ற 10 பணி நாட்களுக்குள், அவற்றை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், நிதியுதவியை வட்டியுடன் அளிக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.25 ஆயிரத்து 130 கோடி மானிய உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.