கோபாலப்பட்டிணத்தில் பலத்த மழை!



தமிழகத்தில்  4 நாட்கள் வெப்பச்சலன இடிமழை அதிகரித்து காணப்படும். மேற்கு காற்றின் தீவிரம் குறைவு மற்றும் காற்று முறிவு காரணமாக 1,2,3,4 தேதிகளில்  தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில்  இடிமழைக்கும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே, ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு. என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்றாலும்  கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. செப்டம்பர் 02 இன்று மாலை 7 மணியளவில் தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து இரவு 8.00 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.  தற்போது வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. மழையின் காரணமாக சாலையோரங்களிலும், வீடுகளிலும் மழைநீர்  தேங்கி நின்றது. 

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments