ஜெகதாப்பட்டினத்தில் நாளை (செப்.3) 2021-மீன் வள மசோதாவை கைவிடக்கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டம்!!



2021- மீன் வள மசோதாவை கைவிடக்கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை செப்.3 ஜெகதாப்பட்டினத்தில் வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் இருந்து மீனவர்களை வெளியேற்றிவிட்டு கார்ப்ரேட் நிறுவனங்களை கப்பலில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்காக இந்திய ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 2021- மீன் வள மசோதாவை கைவிடக்கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை 3.09.2021 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டத்தை மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கசி.விடுதலைக்குமரன் தலைமையில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு: 9095710639


தகவல்: அஹமது கபீர், ஜெகதாப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments