கோபாலப்பட்டிணத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்!



கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு 1-வது வீதியில் (பெண்கள் மதரஸா தெரு) மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு 1-வது வீதியில் (பெண்கள் மதரஸா தெரு) RSM.முகமது அன்சாரி அவர்களின் வீட்டருகில் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/WsnMXg4RVXBd7rFeA), அதே வீதியில் அப்துல் மஜீத் (பூனை) வீட்டருகில் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/oxu17zXz1EgyexBJ6) மற்றும் ஆரிப் கடைக்கு எதிர்புறம் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/dwe2X5kRQynhUu2D9) என மூன்று மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. 

பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. வீட்டின் அருகே உள்ள இந்த மின்கம்பம் விழுந்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டி தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரிப் கடைக்கு எதிர்புறம் உள்ள மின்கம்பம்


அப்துல் மஜீத் (பூனை) வீட்டருகில் உள்ள மின்கம்பம்


RSM.முகமது அன்சாரி அவர்களின் வீட்டருகில் உள்ள மின்கம்பம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments