கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் ஆலமரம் சரிந்து வீழ்ந்தது!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பழமை வாந்த ஆலமரம் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிழல் தரக்கூடியதாக இருந்தது. அது இன்று 07/09/2021 செவ்வாய் 1.40 pm மணியளவில் அருகே உள்ள மின்கம்பியில் சரிந்து விழுந்தது. இதில் அதிஷ்ட வசமாக யாருக்கும் எந்த பதிப்பு இல்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காற்று எதுவும் அடிக்காத நிலையில் மரம் சாய்ந்து விட்டது. மேலும் வேர் பகுதி பலம் இழந்து விட்டதால் மரம் சாய்ந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவுலியா நகருக்கு வருவோரை வரவேற்கும் வண்ணமாக கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டு வந்த மரம் வீழ்ந்திருப்பதை அப்பகுதி மக்கள் கவலையோடு பார்த்து செல்கின்றனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்த ஆலமரத்தின் கீழ் தான் கிராமசபை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று வரை கம்பிரம்மாக காட்சியளித்து வந்த ஆலமரம் (புகைப்படம் எடுத்த நாள் 06.09.2021)





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments