வெளியூர் மரண அறிவித்தல்:- அம்மாபட்டினத்தை சேர்ந்த ருக்கையா அம்மாள் அவர்கள்



அம்மாபட்டினம் தெற்குத் தெரு அ.மு.அப்துல் ஒனி அவர்களின் மனைவியும், காரைக்குடி பெரீனா ஷாப்பிங் மளிகை செய்து இபுறாஹிம் அவர்களின் தாயாரும், திருத்துறைப்பூண்டி நேஷனல் மளிகை உரிமையாளரும் அம்மாப்பட்டினம் வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் SSK.அபுல் ஹசன் அவர்களின் மாமியாருமாகிய ருக்கையா அம்மாள் அவர்கள் இன்று 14.09.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments