கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் மக்தப் மதரஸா மாணவர்களுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கல்!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல், அவுலியா நகர் பள்ளிவாசல், கடற்கரை பள்ளிவாசல் மற்றும் காட்டுக்குளம் பள்ளிவாசல் ஆகியவற்றில் இயங்கி வரும் மக்தப் மதரஸாவின் புதிய கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் (கிதாபுகள்) வழங்கும் நிகழ்வு இன்று (14/06/2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

​மதரஸா மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய பாடத்திட்டத்தின்படியும் இந்த ஆண்டுக்கான புதிய கிதாபுகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

​இந்நிகழ்வில் மதரஸா ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய பாடப்புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட மதரஸா மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது புதிய கல்வியாண்டைத் தொடங்கினர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments