10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்தபள்ளியிலேயே வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவுசெய்து அடையாள அட்டை பெற அரசு வழிவகை செய்துள்ளது. இதன்மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வரவேண்டிய அவசியம் இல்லாததால் போக்குவரத்து செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல், கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.
கடந்த 2020-21 கல்வி ஆண்டில்10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் 4-ம் தேதி (இன்று) வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4-ம் தேதி முதல்18-ம் தேதி வரை ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி அவரவர் பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுநடைபெற பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றமாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி பதிவுசெய்துகொள்ளலாம். பதிவு மேற்கொள்ளும்போது மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் (https://tnvelaivaaippu.gov.in) தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.