அரிமளம் அருகே புன்னகை அறக்கட்டளை சார்பில் 1000 பனை விதைகள் நடவு!



அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 90 வதுபிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் K.செட்டிபட்டி ஊராட்சியில் ,கானப்பூர் குளக்கரையில் 1000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பளாராக ஆயிங்குடி  ஊராட்சி மன்றத் தலைவர் இராஜமாணிக்கம் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார்.
புன்னகை அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார். K.செட்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி சிதம்பரம், வேலன் கிளார்க் முன்னிலை வகித்தார். 
புன்னகை அறக்கட்டளையின் திருமயம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமன், சூர்யா, மெர்சல்கஜன், அடைக்கலம், பழனிக்குமார், செட்டிபட்டி முருகன், அஸ்வின், சந்தோஷ், தனுஷ், இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments