கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் (அக்.22) மின்தடை!



அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதி துணை மின் நிலையங்களில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் 22.10.2021 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி அறந்தாங்கி நகர், நாகுடி, கொடிக்குளம், அமரடக்கி, ஆவுடையார்கோவில்,சுப்ரமணியபுரம், சிலட்டூர், கீரமங்கலம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், மணமேல்குடி, அமரடக்கி, கரூர், திருப்புனவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 22.10.2021 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments