திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூறாவளிக்காற்று சுழன்று வீசியது.
இங்கு கடற்கரையில் இருந்து கடலுக்குள் ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் சூறைக்காற்று வீசும் காட்சியை மீனவா்கள் பாா்த்தனா். அப்போது மேகக் கூட்டம் தாழ்வாக இறங்கி கடல்நீரை வெகுவாக உறிஞ்சியது.
அந்த சூறைக்காற்று கரையை நோக்கி நகா்வது போல இருந்தது. இதனால் படகுகள் சேதமடையலாம் என எண்ணிய மீனவா்கள், அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனா். கடலில் ஏற்பட்ட இந்த நிகழ்வு இப்பகுதியில் நடப்பது இதுவே முதல்முறை என மீனவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மீனவா் கோபி கூறியது: கடந்து சில நாள்களாக கடலின் நிறம் மாறுவதும், கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும், மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் சூறைக்காற்று வீசும் போது கடல்நீரை மேகக் கூட்டம் உறிஞ்சும் நிகழ்வு நடந்தது இதுவே முதல்முறையாகும். இதனால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது என்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.