பாசிப்பட்டினம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று



திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூறாவளிக்காற்று சுழன்று வீசியது.
இங்கு கடற்கரையில் இருந்து கடலுக்குள் ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் சூறைக்காற்று வீசும் காட்சியை மீனவா்கள் பாா்த்தனா். அப்போது மேகக் கூட்டம் தாழ்வாக இறங்கி கடல்நீரை வெகுவாக உறிஞ்சியது.

அந்த சூறைக்காற்று கரையை நோக்கி நகா்வது போல இருந்தது. இதனால் படகுகள் சேதமடையலாம் என எண்ணிய மீனவா்கள், அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனா். கடலில் ஏற்பட்ட இந்த நிகழ்வு இப்பகுதியில் நடப்பது இதுவே முதல்முறை என மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மீனவா் கோபி கூறியது: கடந்து சில நாள்களாக கடலின் நிறம் மாறுவதும், கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும், மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் சூறைக்காற்று வீசும் போது கடல்நீரை மேகக் கூட்டம் உறிஞ்சும் நிகழ்வு நடந்தது இதுவே முதல்முறையாகும். இதனால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது என்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments