கோபாலப்பட்டிணத்தில் பலத்த மழை






தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது, ஆறுதலாக இன்று
அக்டோபர் 25 திங்கள்கிழமை  தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து மாலை 4 மணி அளவில்  மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல குளிர் நிலவி வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொதுமக்கள்  புகைப்படம் & வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக‌ வளைத்தளங்களில் பதிவிட்டனர்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments