கடந்த 2-ந்தேதி நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதா? என்பதை அறிய இணையவழி ஆய்வை அறப்போர் இயக்கம் மேற்கொண்டது. இதில், 431 ஊராட்சிகளில் இருந்து 535 பேர்கள் ஆய்வில் பங்கேற்று பதில்களை தெரிவித்துள்ளனர்.
கிராம சபை விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்பதும், பல ஊராட்சிகளில் அது வெறும் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது என்பதும், ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. தீர்மான புத்தகம் கொண்டு வரவில்லை என 43 சதவீதம் ஊராட்சிகளிலும், மக்கள் கூறும் பிரச்சினைகளை தீர்மான புத்தகத்தில் எழுதுவதில்லை என 59 சதவீதம் ஊராட்சிகளிலும், வரவு-செலவு படித்து காண்பிக்கப்படவில்லை என 63 சதவீதம் ஊராட்சிகளிலும் தெரிவித்துள்ளனர்.
வருகிற ஜனவரி 26-ந்தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் இந்த குறைபாடுகளை களைந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.