நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி முத்துகுடாவில் நடந்த கிராமசபை கூட்டம்! கடமைக்கு நடந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!



முத்துக்குடாவில் 02/10/2021 சனிக்கிழமை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதில் மக்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 2.10.2021 சனிக்கிழமை காலை 11.25 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.ரா.சீதாலெட்சுமிMSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்பு ராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், மு.உதயகுமார் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் சுகாதாரதுறை பணியாளர்கள் சத்துணவு அமைபாளர்கள், ஊர் பொதுமக்கள், ஊர் நிர்வாகத்தினர், பெரியவர்கள், ஊர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இளைஞர்கள் இதில் அதிகமாக கலந்து கொண்டனர்.

சமூக ஆர்வலர் கூறுகையில், கிராம சபையில் அரசு அறிவித்த எந்த ஒரு அஜெண்டாவும் விவாதிக்கப்படவில்லை. வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஊராட்சியின் 31 வகையான ஆவணங்கள் வைக்கப்படவில்லை. சுமார் 8000 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் சரியான குறைவெண்னில் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆகவே இந்த கிராம சபை தீர்மானத்தை ரத்து செய்து விட்டு சிறப்பு கிராம சபை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments