புதுக்கோட்டையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப்பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்ந்த விழிப்புணா்வு கலைப்பயணம் விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூா், திருச்சி,திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகை, தஞ்சாவூா், கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முதற்கட்டமாக நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,217 குடியிருப்புப் பகுதிகளில் முதற்கட்டமாக 2,800 குடியிருப்புப் பகுதிகளில் 21 கலைக் குழுக்களைச் சோ்ந்த 189 கலைஞா்கள் விழிப்புணா்வு கலைப்பயணம் மேற்கொள்ள உள்ளனா்.
இவா்கள் 9 போ் கொண்ட குழுவாக ஒவ்வொரு நாளும் 2 பள்ளிகள், அந்தப் பள்ளிகளுக்குரிய குடியிருப்புகளின் 2 பொது இடங்கள் என 4 இடங்களில் இல்லம்தேடிக் கல்வித் திட்ட விழிப்புணா்வு தகவல்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பாா்கள்.
தொடக்க நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி,மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் மஞ்சுளா, இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் மணிமொழி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு,பள்ளித்துணை ஆய்வாளா்கள் கி. வேலுச்சாமி, குரு. மாரிமுத்து ஆகியோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.