வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு!!



தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது, வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்' முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.தமிழகத்தை சேர்ந்த பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

அதன்படி, 2022-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அரசு செயலாளருக்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments