பேர்ணாம்பட்டு அருகே மாடி வீடு சரிந்து விழுந்து 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலி






 
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பேரணாம்பட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரணாம்பட்டு பகுதிகளில் பெய்த மழையால் அஜிஜியா வீதி, குல்ஷார் தெருக்களில் வெள்ளம் புகுந்தது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல் மற்றும் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அஜிஜியா தெரு பகுதியில் நேற்று இரவு முதல் இந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கெளசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷாபேகம் வீட்டில் வந்து தங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினர் என குழந்தைகள் உட்பட 15 பேர் அந்த வீட்டின் மாடியில் தங்கியுள்ளனர். அந்த வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர்.

கனமழை காரணமாக அந்த வீடு அதிகாலை 6 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த குடும்பத்தினர் அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். மேலும், வீடு இடிந்து விழுந்த தரைமட்டமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வேலூர் ஆட்சியர் குமரவேல் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து ஆய்வு செய்ததோடு, அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனிடையே, இந்த கோர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments