கோபாலப்பட்டிணத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை






வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. 

 இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில்   பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் . இவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கோபாலப்பட்டிணம் கடற்பகுதியில் மழை தற்போது விட்டு விட்டு பெய்து வந்தாலும் காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக  வாய்க்காலில் கட்டி வைத்துள்ளனர். ஒரு சிலர் அருகில் உள்ள நீர்நிலை உள்ள பாத்திகளில் படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்வளத்துறை மூலம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல போவதில்லை என்று முடிவு செய்து உள்ளனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments