கோட்டைப்பட்டினம் காவல் துறையினர் சார்பில் பேரிடர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்!



கோட்டைப்பட்டினம், மீமிசல், ஜெகதாப்பட்டினம், திருப்புனவாசல் போன்ற பகுதிகளில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பேரிடர் காலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அப்போது, பொதுமக்கள் அனைவரும் இடி, மின்னல் பெரு மழைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மழைக்காலங்களில் நீர் நிலைகளில் குழந்தைகளை பெற்றோர்கள் குளிக்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும், மழைக்காலங்களில் மின் கம்பங்கள் ஆங்காங்கே அறுந்து கிடக்கும் ஆகையால் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments