கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நாட்டு படகு மூலம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மணிமுத்து மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடலில் சூறைக்காற்று வீசிய காரணத்தினால் படகு கடலுக்குள் மூழ்கியது இந்நிலையில் படகில் சென்ற கணேசன் என்பவரை மட்டும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றொரு மீனவரான மணிமுத்துவை காணவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மணிமுத்துவை தேடி வந்தனர். ஆனால் மணிமுத்து கிடைக்கவில்லை.
இந்நிலையில் 4-வது நாளாக மாயமான மணிமுத்துவை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு நாட்களாகியும் மீனவரை கண்டுபிடிக்காததால் உறவினர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீனவரை தேடி கண்டுபிடித்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாயமான மீனவரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.