புதுகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை!



கோபாலப்பட்டிணம் கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோபாலப்பட்டிணம், R.புதுப்பட்டிணம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

கோபாலப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளில் மழைநீர் வெள்ளப்பெருக்காக ஓடியது. பலத்த மழை காரணமாக மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments