கொரோனா காலகட்டத்தில் ரெயில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் முன்பதிவு டிக்கெட் மட்டுமே எடுத்து பயணம் செய்யும் படி நிலை இருந்தது.
இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ரெயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை எம்.பி. அப்துல்லா கலந்து கொண்டு பேசுகையில், புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கும் சேவையை தொடங்க வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்காக ரெயில் பெட்டிகளில் டி.14, டி.15, டி.16 ஆகிய பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு எம்.பி.கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.