ஆவுடையார்கோவில் பகுதி எழுநூற்றி மங்களம் வட்டம், பொன்பேத்தி வட்டம், வீரமங்களம் வட்டம், கிடங்கி வயல் வட்டம் மற்றும் பல்வேறு கிராம விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டிற்கு பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தவர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்று ஏற்கனவே சாலைமறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி 19-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து 19-ந் தேதிக்கு முடிவு சரியில்லாமல் போனதால் மீண்டும் நேற்று சாலை மறியல் செய்ய கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன் மறியல் செய்ய முயற்சித்தபோது போராட்டக்காரர்களுடன் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி, ஆவுடையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தேவி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வருகிற 24-ந் தேதி சென்னையில் இருந்து இன்சூரன்ஸ் மேலாளர் மணமேல்குடிக்கு பேச்சு வார்த்தைக்கு வருவதாகவும், அன்றய தினம் பேசிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.