கீரமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி விலை வேகமாக உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் பயிர்களும் மழையால் நாசமாகி உள்ளது. அதனால் அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது. அதே போல தக்காளி பழம் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது.
கீரமங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.30-க்கும் குறைவாக விற்பனை ஆனது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ விலை ரூ.80-க்கு விற்பனையானது. அதன் பிறகு வரத்து குறைவாக உள்ளதால் நாளுக்கு நாள் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
அதே போல இதுவரை பல்வேறு பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவது போல தக்காளியும் விலை உயர்ந்துள்ளதால் 2 தக்காளி பழத்தை ஒரு பாக்கெட்டில் அடைத்து ஒரு பாக்கெட் விலை ரூ.18 என்று விலை வைத்து விற்பனை செய்யப்படும் படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் உணவுக்காக அதிகம் பயன்படுத்தும் தக்காளி பழம் விரைவில் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.