காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் காற்று அதிகமாக வீசக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளத் துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இன்று (புதன்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments