ஜெகதாப்பட்டினம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் அலெக்ஸ் பாண்டி (வயது 26). இவர் பிறந்தநாளை அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் பெரிய பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாடியதாக ஜெகதாப்பட்டினம் போலீசார் அலெக்ஸ் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை (70) என்கிற மூதாட்டியை அலெக்ஸ் பாண்டி, சதீஷ்குமார் (22), சரத்குமார் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் மகன் கருப்பையா ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.