குளமங்கலத்தில் டெண்டர் விடப்பட்ட சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து சாலையை சீரமைக்க மொய் விருந்து நடத்தும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு 4 ரோடு முதல் பிரசித்திபெற்ற பெரிய குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் வழியாக குளமங்கலம் தெற்கு கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி இருந்தது. அதனால் பொது மக்கள் போராட்டங்கள் நடத்திய பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு பாரதப்பிரதமர் மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை சீரமைப்பிற்காக ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாலங்கள் கட்டும் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கூட சாலை பணிகள் நடக்கவில்லை.
அதனால் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மொய் விருந்துக்கு நிதி திரட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து மொய்விருந்து அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். சாலையை சீரமைக்க மொய்விருந்து நடத்தி நிதி திரட்டும் போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.