புதுக்கோட்டையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேடுதல் வேட்டை
புதுக்கோட்டையில் இளைஞர்கள் போதை பொருட்கள் உபயோகப்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை, நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்பவர்கள், அதனை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போதை மாத்திரைகள் பறிமுதல்
இந்நிலையில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருக்கோகர்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
பின்னர் இவற்றை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டை திருவப்பூர் மாயாண்டிசாமி நகரை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன் என்கிற புரோட்டா மணி (வயது 20), நரிமேடு செல்வம் மகன் ஹரிஹரன் (23), பொன்னப்பன் ஊரணி சீனிவாசன் மகன் மணிகண்டன் (20), மாயாண்டி சாமி நகரை சேர்ந்த செல்லத்துரை மகன் சந்தோஷ்குமார் (27) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.