அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியில் நெற்பயிர் மேலாண்மை குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி தலைமையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்குதல் குறித்தும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வம்பன் உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும் பாரம்பரிய பூச்சி கட்டுப்பாடு, எந்திர கட்டுப்பாடு, உயிரியல் கட்டுப்பாடு, ரசாயன கட்டுப்பாடு, நெல் சாகுபடி முறை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கொள்கைகள், தெளிப்பு சாதனங்களின் வகை மற்றும் தெளிப்பு தொழில்நுட்பம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில், வேளாண்மை உதவி அலுவலர் ஜெகதீஸ்வரி, கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.