கீரமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மதுப்பிரியர்கள் சாலை ஓரங்களிலும் குளம், ஏரிக்கரைகளிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதேபோல கீரமங்கலத்தில் இருந்து செரியலூர் செல்லும் சாலையிலும் பலர் அமர்ந்து மது குடித்து விட்டு காலி மது பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போடுவதுடன் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களையும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் உடைந்த மதுபாட்டில்கள் பொதுமக்கள் கால்களில் குத்துவதுடன் வாகனங்களின் டயர்களையும் பஞ்சராக்கி விடுகிறது. விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் செரியலூர் இனாம் ஊராட்சி இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையில் மது அருந்தக்கூடாது என்று விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவில்களுக்கு செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மது குடிக்க வருவோர் பாட்டில்களை உடைத்துப் போடுவதால் அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி விடுகிறது. நடந்து செல்வோர் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. அருகில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீரேற்றும் நிலையத்திலும் இதேபோல செய்கிறார்கள். அதனால் தான் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளோம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.