பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்க ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் `மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை மனுவாக எழுதி இந்த புகார் பெட்டியில் போட்டு விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு இந்த பெட்டியை திறந்து அதிலுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் பெட்டி வைக்கப்படும் நிகழ்வின்போது பள்ளித் தலைமையாசிரியர் செந்தில்முருகன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.