ஆவுடையார்கோவிலில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி!



ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) 2021-22 வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் சூரிய உலர்த்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர்-மேலாண்மை உதவி இயக்குனர் வனஜாதேவி முன்னிலையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை ஏற்று பேசியதோடு, உழவன் செயலியின் பயன்பாடு குறித்து விளக்கி கூறினார். அழகுதுரை தொழில்நுட்ப கருத்துக்களை எடுத்துக் கூறினார். வேளாண் கழிவுகளை எரிபொருளாக கொண்ட தானிய உற்பத்தி காளான், மிதவை படுக்கை உலர்த்தி, சூரிய குழாய் சுரங்க உலர்த்தி ஆகியவற்றின் மூலம் தேங்காய் கொப்பரைகள் மற்றும் தானியங்களை உலர்த்த முடியும் என்று எடுத்துக் கூறப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் முல்லை, நுண்சத்து மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து எடுத்துக் கூறினர். 

இப்பயிற்சியில், ஆவுடையார்கோவில் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் செல்வராணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments