கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு! மத்திய மந்திரிசபை ஒப்புதல்!!



பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2022-ம் ஆண்டு பருவத்துக்கு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, அரவை கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 335-ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 590 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முழு கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவை விட 57 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments