SBI டிஜிட்டல் சேவைகள் நாளை சனிக்கிழமை இயங்காது..!!






ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிஜிட்டல் சேவைகளின் மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்வதற்காக முன் அறிவிப்புடன் எஸ்பிஐ தனது டிஜிட்டல் சேவை தளத்தை முடக்க உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிஜிட்டல் சேவைகளின் எண்ணிக்கையும், தரத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் சேவைகளை முடக்கினால் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை உணர்ந்து மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்வதற்காக முன் அறிவிப்புடன் எஸ்பிஐ தனது டிஜிட்டல் சேவை தளத்தை முடக்க உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்வதற்காகத் தனது வாடிக்கையாளர்களிடம் டிவிட்டர் வாயிலாக டிசம்பர் 11ஆம் தேதி அதாவது நாளை எஸ்பிஐ இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் இயங்காது என அறிவித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.  எஸ்பிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவீட்டின் படி டிசம்பர் 11ஆம் தேதி 23.30 முதல் 12ஆம் தேதி 4.30 வரையில் சுமார் 300 நிமிடங்கள் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் பேங்கிங், யூனோ, யூனோ லைட், யூபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வங்கியில் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மெயின்டனன்ஸ் பணிகளைச் செய்ய உள்ளோம், வாடிக்கையாளர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments