மகனுக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய்!






திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுநீரக கோளாறால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.  அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால இளைஞரின் தாயாரே மகனுக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார்.  அதன்படி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.  இதையடுத்து வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை பிரதிபலனாக தாயும் மகனும் நலமுடன் இருப்பதாக தற்போது மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள மருத்துவமனை முதல்வர் வனிதா,  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது.  ஆனால் முதல் முறையாக இந்த மருத்துவமனையில் உயிருடன் உள்ள ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டு மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 19 வயது மகனுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக வழங்கிய லால்குடி பகுதியை சேர்ந்த தாய்க்கும்,  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கும்  பாராட்டு குவிந்து வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments