புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாட்டு வண்டி பந்தயம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தையம்  நடைபெற்றது.
மணமேல்குடி தாலுகா மணமேல்குடியில்  ஆண்டுதோறும் மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தையத்தில் நாகை, புதுக்கோட்டை ,தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 87 ஜோடி மாடுகள் பந்தையத்தில் கலந்துகொண்டன.
மணமேல்குடி கடைவீதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம்  எல்லை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
பெரிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 25 ஜோடி மாடுகளும் கரிச்சான்மாடு பிரிவில் 44 ஜோடி மாடுகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
பந்தையத்தில் சீறிப்பாய்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு ரூ 3 லட்சம் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் கோப்பைகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் கண்டுகளித்தனர்.  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments