திருச்சியில் இருந்து இலங்கைக்கு சிறப்பு மீட்பு விமானமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் காலை 9 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் காலை 10.10 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் செல்வது வழக்கம். இதன்படி நேற்று காலை திருச்சி வந்த இந்த விமானம், பின்னர் 120 பயணிகளுடன் கொழும்பு நோக்கி புறப்பட்டது. ஓடுதளம் வரை விமானம் சென்ற நிலையில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு, விமானத்தில் இருந்த 120 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.