இருசக்கர வாகனம் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையில் ஓரமாக ஒதுங்கிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் SP மடத்தை நோக்கி இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஜனவரி 26 காலை 9 மணியளவில் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் முன்னே சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கோபாலப்பட்டிணத்திற்கு செல்ல வளைந்ததையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க, பின்னோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை இளைஞர் சற்று ஓரமாக திருப்பியதால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கோபாலப்பட்டிணம் நுழைவாயில் அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், SP மடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பாக்கத்தை சேர்ந்த வாலிபர் படுகாயமடைந்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் முன்பகுதி நொறுங்கியது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.